Tag Archives: Kameshvari

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

முன்னுரை

இதை இங்கு பதிவிடும் பொழுது ஸ்ரீ ஆதி சங்கரரின் தொலைநோக்கு நன்கு புலனாகிறது.

‘ஸ்ரீ வித்யா’ எனப்படும் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகையின் ஆராதனையில் மந்திரம், முத்திரை, அனுஷ்டானம் போன்ற எல்லாமே மிகவுமே விஷேஷமானது, கடினமானது. இந்த முறையில் சித்தி பெற்ற ஒருவரே, இன்னொருவருக்கு தீக்ஷை அளிக்கமுடியும். உதாரணத்திற்கு, அம்பிகையின் கட்கமாலா சித்தி அருளப்பட்டாலே, ஸ்ரீ வித்யாவின் ‘பாலா மந்திரம்’ எனும் த்ரியக்ஷரி உபதேசம் நடக்கும். த்ரியக்ஷரி சித்தியானாலே ‘பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி’ கிட்டும், பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி பாராயணம் செய்பவரே பாலாம்பிகா த்ரியக்ஷரி உபதேசம் செய்ய முடியும். பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி சித்தியானால் மட்டுமே அம்பிகையின் ‘சம்புடீக்ருத’ நவாக்ஷரி கிட்டும். இவற்றின் பின்னரே குருவானவர் பன்சதஸியை உபதேசிப்பதை ஆலோசிப்பர். ஸாதகர் நன்கு தேர்ச்சி பெற்றார் என குருவானவர் பல பரீக்ஷைகள் மூலம் அறிந்துகொண்ட பின்னரே, அம்பிகையின் ஷோடஸாக்ஷரி உபதேஸம் நடக்கும்.

இதில் விஷேஷம் என்னவெனில், அம்பிகையின் ஷோடஸாக்ஷரி சித்தியாயின், அந்த ஸாதகர் ஒருவிதத்தில் அம்பிகையின் மறு உருவே ஆகியிருப்பர்.

வரும் காலங்களில் இப்படிப்பட்ட ஸாதகர் கிடைப்பதரிது என்று, தீர்கதரிஸி ஆதி சங்கரர் நன்றாக தெரிந்துவைத்திருந்தார் என்றே சொல்லவேண்டும். இல்லையெனில், 51 அக்ஷரங்கள் கோர்த்து அமைக்கவேண்டிய அக்ஷர புஷ்பமாலாவை, (அம்பிகையின் கழுத்தை அலங்கரிக்கும் முத்துமாலை 51 முத்துக்களால் – அக்ஷரங்களாலேயே ஆனது) வெரும் 17 பத்திகளில் அடைத்து, அத்துடன் பன்சதஸியையும், ஷோடஸியையும் அதில் மறைத்து அந்த ஸ்தொத்திரத்தை, ஸ்தவமாக அதாவது அம்பிகையின் மானஸீக பூஜையாக அமைத்தது அம்பிகையின் பேரருளால் அன்றோ! அம்பிகைக்கு உகந்த 64 உபசாரங்களையும் இந்த ஸ்தவத்தினூடே இணைத்து ஒரு பரிபூரண மானஸ பூஜா முறையையன்றோ ஆதிசங்கரர் இந்த ஸ்தவத்தில் அமைத்துக்கொடுத்துள்ளார், அதன் சக்தியை அவர் இப்படி உரைக்கிறார். “எவரொருவர் இந்த ஸ்தவத்தை நித்யமும் முவ்வேளை பக்தியுடனும், ஸ்ரத்தையுடனும் பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் சிந்தையில் அம்பிகையும், நாவில் ஸ்வாதத்தின் சாரமான சரஸ்வதியும், இல்லத்தில் ஸ்ரீ எனும் பதத்திற்கே உரியவளான ஸ்ரீ லக்ஷ்மி தேவியும் நடனமாடுவார்” என்று கீலகமாய் ஆசீர்வதித்திருக்கிறார்.

சிந்தையில் சிவமும், முகத்தில் ப்ரம்ம தேஜஸும், வாக் சித்தியும், இல்லத்தில் அளவிடதற்கரிய செல்வமும், மன்னிக்கவேண்டும் புல்லரிக்கிறது.

வரும் பதிவுகளில் இயன்றவரை ஒவ்வொரு பத்தியையும் யாம் அறிந்தவரை விளக்க கடமைப்பட்டுள்ளேன்

சுபம்

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஸான்னித்ய ஸ்தவம் | SANNIDHYA STAVAM

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ திரிபுரசுந்தரி ஸான்னித்ய ஸ்தவம்

श्रीत्रिपुरसुन्दरीसान्निद्ध्यस्तवम्

कल्पभानुसमानभासुरधाम लोचनगोचरं
किं किमित्यतिविस्मिते मयि पश्यतीह समागताम्।
कालकुन्तलभरनिर्जितनीलमेघकुलां पुर-
श्चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥१॥

एकदन्तषडाननादिभिरावृतां जगदीश्वरीं
एनसां परिपन्थिनीमहमेकभक्तिमदर्चिताम्।
एकहीनशतेषु जन्मसु सञ्चितात्सुकृतादिमां
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥२॥

ईदृशीति च वेदकुन्तलवाग्भिरप्यनिरूपितं
ईशपंकजनाभयष्टिकृतातिवन्द्यपदाम्बुजम्।
ईक्षणान्तनिरीक्षणेन मदिष्टदं पुरतोऽधुना
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥३॥

लक्षणोज्ज्वलहारशोभिपयोधरद्वयकैतव-
लीलयैव दयारसस्रवदुज्ज्वलत्कलशान्विताम्।
लाक्षयाङ्कितपादपातिमिलिन्दसन्ततिमग्रत-
श्चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥४॥

ह्रीमिति प्रतिवासरं जपसुस्थिरोऽहमुदारया
योगिमार्गनिरूढयैक्यसुभावनं गतया धिया।
वत्स हर्षमवाप्तवत्यहमित्युदारगिरं पुर-
श्चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥५॥

हंसवृन्दमलक्तकारुणपादपंकजनूपुर-
क्वाणमोहितमनुधावितं मृदुशृण्वतीम्।
हंसमन्त्रमहार्थतत्त्वमयीं पुरो भाग्यत-
श्चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥६॥

संगतं जलमभ्रवृन्दसमुद्भवं धारणीधर-
धारया वहनञ्जसा भ्रममाप्य सैकतनिर्गतम्।
एवमादि महेन्द्रजालसुकोविदां पुरतोऽधुना
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥७॥

कम्बुसुन्दरकन्धरां कचभारनिर्जितवारिदां
कण्ठदेशलसत्सुमङ्गल हेमसूत्रविराजिताम्।
कादिमन्त्रमुपासतां सकलेष्टदां मम सन्निधौ
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥८॥

हस्तपद्मलसत्त्रिकाण्डसमुद्रिकां तामद्रिजां
हस्तिकृत्तिपरीतकार्मुकवल्लरीसमचिल्लिकाम् ।
हर्यजस्तुतवैभवां भवकामिनीं मम भाग्यद-
श्चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥९॥

लक्षणोल्लसदङ्गकान्तिझरीनिराकृतविद्युतां
लास्यलोलसुवर्णकुण्डलमण्डितां जगदम्बिकाम्।
लीलयाखिलसृष्टिपालनकर्षणादि वितन्वतीं
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥१०॥

ह्रीमिति त्रिपुरामनु स्थिरचेतसा बहुधादर्चितां
हादिमन्त्रमहाम्बुजातविराजमानसुहंसिकाम्।
हेमकुम्भघनस्तनां चललोलमौक्तिकभूषणां
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥११॥

सर्वलोकनमस्कृतां जितशर्वरीरमणाननां
सर्वदेवमनप्रियां नवयौवनोन्मदगर्विताम्।
सर्वमङ्गलविग्रहां मम पूर्वजन्मतपोबलां
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये॥१२॥

कन्दमूलफलाशिभिर्बाह्ययोगिभिश्च गवेषितां
कुन्दकुड्मलदन्तपङ्क्तिविराजितामपराजिताम्।
कन्दमागमविरूढां सुरसुन्दरीभिरिहागताम्
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये॥१३॥

लत्रयाङ्कितमन्त्रराट्समलंकृताम् जगदम्बिकां
लोल नील सुकुन्तलावलि निर्जितालिकदम्बकाम् ।
लोभमोहविदारिणीं करुणामयीमरुणां शिवां
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये॥१४॥

ह्रीं प्रज्ञाख्य महामनोरधिदेवतां भुवनेश्वरीं
हृत्सरोजनिवासिनीं हरवल्लभां बहुरूपिणीम्।
हारनूपुरकुण्डलादिभिरन्वितां पुरतोऽधुना
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये॥१५॥

श्रींसुपञ्चदशाक्षरीमपि षोडशाक्षररूपिणीं
श्रीसुधार्णवमध्यशोभितसरोजकाननचारिणीम्
श्रीगुहस्तुतवैभवां परदेवतां मम सन्निधौ
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये॥१६॥

அன்பர்களுக்கு,

இயன்றால், அடுத்த பதிவில், இன்று இட்ட பதிவின் தமிழாக்கமும், பொருளும், ஆதி சங்கரருடைய இன்னொரு க்ருதியும், கல்பவ்ருக்ஷமுமாம், த்ரிபுராம்பிகையின் “கல்ப ஸகி ஸ்தவம்” பற்றியும் எழுத உள்ளேன். இன்றும் உத்தராஞ்சல் மாநிலத்தில், ஜோஷிமடம் எனும் குகை கோவில் அருகில், ஆதி சங்கரர் தங்கி தவம் செய்த இடத்தில், ஒரு போதி வ்ருக்ஷம் உள்ளது. அங்குள்ளோர் இன்றும், அதை கல்பவ்ருக்ஷமாகவே வழிபட்டு வருகின்றனர்.

இதில் அம்பிகையை ஆதி சங்கரர், தன் தோழியாகவே, எப்பொழுதும் தன்னுடனே இருப்பதாகவே ஸ்மரிக்கிறார். இந்த ஸ்தவமும், பன்சதஸியிலேயே அமைந்திருக்கிறது.

தொடரும்

சுபம்

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் – 6 | MUSINGS – 6

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

சிவன் எங்கு இருக்கமாட்டான்? (அ) சிவனை கோவிலிலிருந்து வெளியேற்றுவது எப்படி?

தீக்ஷிதனாகிய ஆச்சாரியார், பக்தி இல்லாதவனாக பூஜித்தால், ராஜா, ராஜ்யம் இவர்களுக்கு கெடுதல்; அது எவ்விதம் எனில், காட்டில் இருக்கிற துஷ்ட மிருகமாகிற ஸிம்ஹத்தைக் கண்ட யானையானது எப்படி பயம் அடையுமோ, அதுபோல் பக்தியில்லாத ஆச்சாரியனைப் பார்த்த உடனே சிவபெருமான் பயம் அடைந்து (விலகி விடுவார்) மந்திரம் இல்லாமல் அர்ச்சனை செய்தால், அந்த ஈச்வரன் பயம் அடைவார் (விலகி விடுவார்). (காரண ஆகமம் – பூஜாவிதி படலம் – ஸ்லோகம் 311 – 312), மேல் விபரம் இங்கு காண்க!

ஒவ்வொரு கிரியையும், அதற்கேற்ற பாவனை, மந்திரங்களுடனேயே செய்யப்படல் வேண்டும். பாவனை இல்லாது, வெரும் மந்திரங்களுடன் மட்டும் செய்தால், அது பயனற்றவை ஆகும். பாவனையும் இல்லாது மந்திரங்களும் இல்லாது கிரியைகளை செய்தால், அச்செயல் தேவர்களை மகிழ்விக்காது, அசுரர்களையே மகிழ்விக்கும். அதன்காண், பூஜைகளின் முழுப்பயனும், மக்களை சென்று அடைய பாவனை, கிரியை, மந்திரம் மூன்றிலும் லோபம் (குறை) இருத்தல் கூடாது.

அப்படி அகலும் தருணத்திலேயே, இறைவன், தன் சன்னதியில் உபச்சாரம் செய்யாமல் அபச்சாரம் செய்தவனுக்கு, ஸந்ததி இல்லாதிருக்கட்டும் என்றும், இச்சந்ததியினர் என்றும் தம்மை ஆராதிக்க தகுதியில்லாதவர் என்றும் எண்ணி அகலுகிறார்.

அங்ஙனமாயின், பக்தி, ஆச்சாரம், அனுஷ்டானம் இல்லாத இடத்தில் இறைவன் இருப்பதில்லை என்றே பொருள். இறைவன் இல்லாத இடத்தில் இறைவி எப்படி இருப்பாள்? அம்மையும் அகன்றிருப்பாளே! அய்யனும், அம்மையும் இல்லாத இடத்தில் உப, பரிவார தேவதைகளும் இருக்கமாட்டார்களே, அவர்களோடு, அந்த க்ஷேத்ரத்தில் வழிபடுகின்ற சித்தர் பெருமக்களும் அகன்றிருப்பார்களே, ஆகையால், ஒருவர் செய்யும் தவறினால் ஆராதிக்கும் அனைவரும் ஆராதனையின் பலனிளக்கிறார்கள் அன்றோ!

ரௌத்திரனுக்கே, பயம் என்ற சொல்லே தெரியாத இறைவனையே அனுஷ்டானக் குறையால் ஓட்டுவிக்கும் செயல் நமக்கு பலனளிக்குமா?

சுபம்

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | Periyava and Kundalini | பெரியவாளும் குண்டலிநியும்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

மஹா பெரியவா

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

குண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை

இன்னொரு விஷயம், அம்பலப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டிய விஷயம். அதன் பேரைச் சொன்னால்கூட அதுவும் அம்பலப்படுத்துவதுதான் என்பதால் அடியோடேயே பிரஸ்தாபிக்காமல் விட்டு விடணும் என்று இத்தனை நாழி நினைத்துக் கொண்டிருந்ததையும் இப்போது கொஞ்சம் ‘டச்’ பண்ணுகிறேன். [சிரித்து] அதை யாரும் ‘டச்’பண்ணவேண்டாமென்று ‘வார்ன்’பண்ணுவதற்கே ‘டச்’ பண்ணுகிறேன். ஏனென்றால் நான் சொல்லாவிட்டாலும் அந்தப் பேர் இப்போது ரொம்ப அடிபடுகிறது. குண்டலிநீதான். குண்டலிநீ, அது ஸம்பந்தமான சக்ரங்கள் பேரெல்லாம் இப்போது நன்றாகவே இறைபட்டுக் கொண்டிருக்கின்றன. ‘ஸெளந்தர்ய லஹரி’யிலும் அந்த விஷயங்கள் வருகின்றன. ஆகையினால் அதை நீங்கள் பாராயணம் பண்ணும்போது அந்தப் பேர்களைப் பார்த்துவிட்டு, நான் ‘டச்’ பண்ணா விட்டாலும், வேறே புஸ்தகங்களைப் பார்க்கத்தான் பார்ப்பீர்கள். அதற்கு நாமேதான் சொல்லிவிடலாமே, [சிரித்து] இந்த விஷயத்தை நான் ஏன் சொல்லப் போவதில்லை என்று சொல்லிவிடலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

ஒரு சின்ன அணுவுக்குள்ளே எப்படி ஒரு பெரிய சக்தியை அடைத்து வைத்திருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரப்ரஹ்ம சக்தி குண்டலிநீ என்ற சக்தியாக இருக்கிறது; அது நம்மைப் போன்றவர்களிடம் தூங்குகிற மாதிரி ஸ்திதியில் இருக்கிறது; அதற்கான யோக ஸாதனை பண்ணினால், – பண்ணினால் என்பதை ‘அன்டர்லைன்’ பண்ணணும் – அப்படி [ஸாதனை] பண்ணினால் அது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புப் பெற்றுச் சில சக்ரங்கள் வழியாக ஊர்த்வ முகமாக [மேல் நோக்கி] ஸஞ்சாரம் பண்ணி முடிவில் பராசக்தியாகப் பூர்ண விழிப்புப் பெற்று, அப்புறம் அந்த பராசக்தியும் பரசிவத்தோடு ஐக்யமாகி ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் ஏற்படும் – என்பதுதான் ஸாரமான விஷயம். இதைத் தெரிந்து கொண்டால் போதும்; இவ்வளவு தெரிந்து கொண்டால் போதும்.

நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்? அதற்காகத்தான் குண்டலிநீ யோகம் என்று இப்படியரு சாஸ்திரம் இருக்கிறது என்று நான் இப்போது சொன்னேனே, அந்த அளவுக்குத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மேல் வேண்டாம். அது அவசியமில்லை.

ஏனென்றால் நம்மிலே ஆயிரத்தில் ஒருவர் – இல்லை, லக்ஷம் பத்து லக்ஷத்தில் ஒருவர் கூட முறைப்படி அந்த ஸாதனை பண்ணுவதற்கு முடியாது அப்படியே பண்ணினாலும் முறைப்படி முன்னேறி ஸித்தி அடைகிறது ஸாதகர்களிலும் அபூர்வமாக இரண்டொருத்தரால்தான் முடியும் – ”யததாமபி கச்சிந்” என்று பகவான் சொன்னாற் போல. அதனால்தான் ‘அதற்கான யோக ஸாதனை பண்ணினால்’ என்று அழுத்திச் சொன்னது. ‘பண்ணினால்’ என்பது ஸரி. ஆனால் பண்ணுவதுதான் முடியாத கார்யம்! இந்த ஜீவாத்மாவின் சின்ன சக்தி பரமாத்மாவின் மஹாசக்தியிலே கலப்பது – அல்லது அந்த மஹாசக்தியாகத் தானே விகஸிப்பது [மலர்வது] – லேசில் நடக்கிற விஷயமில்லை.

சாந்தத்திலே ஒன்றாகக் கலந்து ப்ரஹ்மமாவதை விடவும் சக்தியிலே கலப்பதைக் கஷ்டமானதாகவே அந்தப் பராசக்தி வைத்துக் கொண்டிருக்கிறாள்!

பக்தி பண்ணுகிறவனையும், ஞான வழியில் போகிற, வனையுங்கூடத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தன்னுடைய சக்திக் கூத்தைப் பார்க்கும்படியும், அதை அவர்கள் வழியாகவும் கொஞ்சம் செலுத்தி அவர்களால் லோகத்துக்கு அநுக்ரஹம் கிடைக்கும்படியும் அவள் பண்ணுவதுண்டுதான். ஆனாலும் இவர்கள் [பக்தரும், ஞானியும்] தாங்களாகச் சக்திக்கு ஆசைப்படவில்லை. பக்தன் ப்ரேமைக்கு, ப்ரேமானந்தத்திற்குத்தான் ஆசைப்படுகிறான். அப்படிப்பட்டவர்களிடம், அவளே, ‘பார்த்தாயா என் சக்தி ப்ரபாவம்! என்று ‘போனஸ்’ மாதிரி அதைக் காட்டிக் கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கும் அதை, லோக கல்யாணத்தை உத்தேசித்து, தருகிறாள். ஆனால், யோகி என்கிறவன் சக்தியில் ஸித்தியாவதற்கே குண்டலிநீ யோகம் என்று பண்ணும்போது, [சிரித்து] அவள் இல்லாத கிராக்கியெல்லாம் பண்ணிக்கொண்டு அப்புறந்தான் கொஞ்சங் கொஞ்சமாக ஏதோ இண்டு இடுக்கு வழியாகத் தன் சக்தியை அவிழ்த்து விடுகிறாள்.

இன்றைக்கு குண்டலிநீ தீக்ஷை பல பேர் கொடுத்து, பெற்றுக் கொண்டவர்களிடம் தூங்குகிற குண்டலிநீ முழித்துக் கொண்டுவிட்டதாகச் சொல்வதெல்லாம் இந்த இண்டு இடுக்குக் கீற்று வெளிப்படுவதுதானே யொழிய பூர்ணமான சக்தி ஜ்யோதிஸ் ஸூர்யோதயத்தைப் போல வெளிப்படுவது இல்லை. அரைத் தூக்கம், கால் தூக்கம் என்று சொல்கிறோமே, அப்படி ஸாதாரணமாக நமக்குள் எல்லாம் முக்காலே மூணு வீசம் தூக்கத்துக்கும் மேலே ப்ராண சக்தி ரூபத்தில் பராசக்தி தூங்கிக்கொண்டிருக்கிறாளென்றால், குண்டலிநீ தீக்ஷையாகி, அது ‘ரைஸ்’ ஆகிவிட்டது என்று சொல்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் முக்கால் தூக்கம் என்கிற அளவுக்கு நம்மைவிடக் கொஞ்சம் முழித்துக் கொண்டிருப்பாள்! அவ்வளவுதான். அதிலேயே [இந்தக் குறைந்த அளவு மலர்ச்சியிலேயே] உச்சந்தலை வரை ஒரு வைப்ரேஷன், ப்ரூமத்தியில் [புருவ மத்தியில்] ஒரு கான்ஸன்ட்ரேஷன் அப்போதப்போது உண்டாவதை வைத்துக்கொண்டு, குண்டலிநீ பூர்ணமாக முழித்துக்கொண்டு லக்ஷ்யமான உச்சிக் சக்ரத்திற்குப் போய்விட்ட மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாஸ்தவத்தில் ஏதோ கொஞ்சம் சக்தி, கொஞ்சம் ஏறுவது, மறுபடி விழுவது என்றுதான் நடக்கிறது. ஏறும்போதும் அங்கங்கே உண்டாகிற அத்புத சக்திகளில் (ஸித்திகளில், சித்து என்று சொல்வது இந்த சக்திகளைத்தான். அப்படிப்பட்ட சக்திகளில்) சித்தத்தை அலைபாய விடாமல், லக்ஷ்யத்திலேயே ஈடுபடுத்துவது ஸாமான்யமான ஸாதனை இல்லை. அவளேதான் இப்படிப்பட்ட சின்ன ஸித்திகளைக் கொடுத்து பெரிய, முடிவான ஸித்தியிலிருந்து டிஸ்ட்ராக்ட் பண்ணி மயக்குவது. இதெல்லாம் போதாதென்று குண்டலிநீ ஸஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே.

லோகத்தில் பலவிதமான மாயைகள், மாயையிலிருந்து மீளுவதற்குப் பலவிதமான ஸாதனைகள் என்று அவள் பரப்பி வைத்திருப்பதில் நேரே அவளுடைய சக்தியைப் பிடிப்பது என்பதற்காக் குண்டலிநீ யோகம் என்று ஒரு ஸாதனையை வைத்திருக்கும்போது அதிலேயே நிறைய மாயையையும் பிசைந்து வைத்திருக்கிறாள். ஏன் அப்படி என்றால் என்ன சொல்வது? ஒரு பயிர் ஸுலபத்தில் பயிர் பண்ணி மகசூல் காணும்படி இருக்கிறது. இன்னொரு பயிருக்கு ஏற்ற நிலம், சீதோஷ்ணம், எரு ஆகிய எல்லாமே கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஏனென்று கேட்டால் என்ன பதில் சொல்வது? பல தினுஸாக அவள் லீலா நாடகம் ஆடுவதில் இதெல்லாம் அங்கம். அப்படி குண்டலிநீ யோக ஸாதனை என்பதை ரொம்பவும் சிரம ஸாத்யமாகவே வைத்திருக்கிறாள்.

‘பக்தி, ஞான மார்க்கங்களில் போகிறவர்கள் மட்டும் ஸுலபமாக ஸித்தி அடைந்து பிரத்யக்ஷதரிசனமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ பெற்றுவிடுகிறார்களோ என்ன? ‘என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. ஆனாலும் எந்த அளவுக்கு அவர்கள் ஸாதனை பண்ணியிருந்தாலும், பண்ணுகிற மட்டும் அது [குண்டலிநீ யோகம் போல] இத்தனை ச்ரமமாகவோ, சிக்கலாகவோ இருப்பதில்லை.

அதோடுகூட ஸாதனையில் தப்பு ஏற்படுவதால் இத்தனை விபரீதமாகவும் அவற்றில் நடந்துவிடுவதில்லை. காம யோகத்தைப் பற்றி – அதாவது பலனில் பற்று வைக்காமல் ஸ்வதர்மமான கடமைகளை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணுவதைப் பற்றி – பகவான் சொல்லியிருப்பதெல்லாம் பக்தி, ஞான யோகங்களுக்கும் பெரும்பாலும் பொருந்துவதுதான். ‘யோகம்’ என்றாலே நினைக்கப்படும் குண்டலிநீ முதலான மார்க்கங்களுக்குத்தான் அது அவ்வளவாகப் பொருந்தாமலிருக்கிறது. என்ன சொல்கிறாரென்றால்,

நேஹாபிக்ரம நாசோஸ்தி ப்ரத்ய்வாயோ ந வித்யதே *
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் **

என்கிறார். என்ன அர்த்தமென்றால் ‘இந்த வழியில் நாம் பண்ணும் முயற்சி பலன் தராமல் வீணாகப் போவது என்பது இல்லை. ஏறுமாறாக, விபரீதமாகப் பலன் ஏற்படுவது என்பதும் இல்லை. ஏதோ ஸ்வல்பம்தான் ஸாதனை பண்ணினாலுங்கூட ஸரி, ‘நமக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடிவே இல்லையோ?’ என்கிற பெரிய பயத்திலிருந்து அது நம்மை ரக்ஷித்து விடும்’ என்கிறார். ஆனால் குண்டலிநீ மாதிரி ரொம்பவும் சிரமமாக, சிக்கலாக உள்ள ஒரு ஸாதனையில் போக ஆரம்பிக்கிறவர்களில் பலபேர் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு அப்புறம், ‘நம்மால் இதில் ஜயிக்க முடியாது’ என்று விட்டு விடுவதைப் பார்க்கிறோம். என் கிட்டேயே வந்து எத்தனையோ பேர் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது ‘அபிக்ரம நாசம்’- ‘முயற்சி வீணாவது’- என்று பகவான் சொன்னது நடந்துவிடுகிறது. ‘ப்ரத்யவாயம்’- ‘விபரீத பலன்’- உண்டாவது என்கிறாரே, அதற்கும் இந்த வழி நிறையவே இடம் கொடுக்கிறது. நடுவாந்தரத்தில் ”விட்டுவிடுகிறேன்”என்று இவர்கள் வருவதற்கே முக்யமாக அதுதான் காரணமாயிருக்கிறது. கடைசி வரையில் பயமும் போக இடமில்லை. ‘ஸரியாகப் பண்ணி பலன் பெறுவோமா, அல்லது இசகு பிசகாக ஆகிவிடுமா?’என்ற பயம். அது மட்டுமில்லாமல் நடுவாந்தரப் பலன்களாகச் சில அத்புத சக்திகள் கிடைப்பதே பெரிய பலனைக் கோட்டைவிடும்படி திசை திருப்பிவிடுமோ என்ற பயம்! ஸ்வல்பம் அநுஷ்டித்தாலும் பயத்தைப் போக்கும் என்று பகவான் சொன்னது இந்த வழிக்கு ஏற்கவில்லை.

அதோடு பகவான் சொல்லாத இன்னொன்றும் இதில் சேருகிறது. என்னவென்றால், ஸாதனை பலிக்குமா என்று கடைசி மட்டும் பயம் ஒரு பக்கம் இருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் ஏதோ ஸ்வல்ப பலன் கிடைத்ததிலேயே தாங்கள் முடிவான ஸித்தி அடைந்து விட்டதாக ஏமாந்து போவதும் இதில் இருக்கிறது. பக்தி பண்ணுகிறவர்களும், ஞான விசாரம் பண்ணுகிறவர்களும் தங்களுக்கு நிஜமாகவே தெய்வ ஸாக்ஷாத்காரமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ ஏற்படுகிற வகையில் அவை ஏற்பட்டு விட்டதாக நினைப்பதற்கில்லை. ஆனால் குண்டலிநீ பண்ணுபவர்கள் ஏதோ கொஞ்சம் சக்ரங்களில் சலனம் ஏற்பட்டு விட்டால்கூட ஸித்தியாகி விட்டதாக நினைத்து விடுகிறார்கள் – தூரக்க [தூரத்தில்] அவுட்லைனாக கோபுரம் தெரிவதைப் பார்த்தே கர்பக்ருஹத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிற மாதிரி!

நான் குண்டலிநீ யோகம் தப்பு வழி என்று சொல்லவேயில்லை. நிச்சயமாக அத்வைத ஸமாதிவரை கொண்டு சேர்க்கக் கூடிய உசந்த வழிதான். இல்லாவிட்டால் யோகீச்வரர்கள், ரிஷிகள் இப்படியரு சாஸ்திரத்தைக் கொடுத்திருப்பார்களா? அதெல்லாவற்றையும்விட, நம்முடைய ஆசார்யாள் அந்த விவரங்கள் சொல்லியிருப்பாரா? வழி ஸரிதான். ஆனால் அந்த வழியிலே போகிற அளவுக்கு நாம் ஸரியாயில்லை என்பதாலேயே, தீரர்களாக இருக்கப்பட்ட யாரோ சில பேரைத் தவிர, நமக்கு அது வேண்டாம் என்கிறேன். ஸித்தி பெற்ற குருவின் இடைவிடாத கண்காணிப்பிலேயே விடமுயற்சியுடன் பரிச்ரமப்பட்டு அப்யஸிக்க வேண்டிய ஒரு வழியைப் பற்றிச் சும்மாவுக்காக எதற்காகப் பேசவேண்டும் என்பதால் சொல்கிறேன்.

நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்? நம்மால் முடிந்த முயற்சிகளைப் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள என்ன வழி என்று ஆலோசனை பண்ணத்தான். அப்படியிருக்கும் போது நம்மால் முடியாத முயற்சிகளைப் பற்றிப் பேசி எதற்காகப் பொழுதை வீணாக்க வேண்டும்? முடியாத முயற்சி என்பதோடு அவசியமும் இல்லாத ஸமாசாரம். பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். காஞ்சீபுரத்திற்கு வழி கேட்டால், நாம் ஸுலபமாகப் போய்ச் சேரும்படி, ‘இப்படியிப்படி ப்ராட்வேயிலிருந்து பஸ் இருக்கு. பீச்சிலிருந்து ரயில் இருக்கு’ என்று சொன்னால் அர்த்தமுண்டு. ‘திருவொற்றியூரிலிந்து காஞ்சீபுரம் வரை பல்லவராஜா காலத்தில் போட்ட அன்டர்-க்ரவுன்ட் டன்னல் இருக்கு. அங்கங்கே தூர்ந்து போயிருக்கும். அந்த வழியாகப் போகலாம்’ என்றால் அர்த்தமுண்டா? வாஸ்தவமாகவே அப்படியும் வழி இருக்கலாம் – வாஸ்தவத்தில் இல்லைதான்; ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – டன்னல் இருக்கலாம். அதிலே துணிச்சலோடு போகிற ஸாஹஸக்காரர்களும் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி வழி கேட்கிற ஸாதாரண ஜனங்களுக்குச் சொல்லி என்ன ப்ரயோஜனம்?

ஸர் ஜான் உட்ராஃப் [குண்டலிநீ யோகம் குறித்து] ‘ஸர்பென்ட் பவர்’முதலான புஸ்தகங்கள் போட்டாலும் போட்டார், வகை தொகையில்லாமல் அதில் ஸித்தியான யோகிகள் என்று பல பேர் தோன்றி ‘க்ளாஸ்’ நடத்துவதும், இன்னும் பல பேர் ஒரு அப்யாஸமும் பண்ணாமலே, பண்ணும் உத்தேசமும் இல்லாமலே, ‘மூலாதாரா, ஸஹஸ்ராரா’ என்றெல்லாம் எழுதி, பொது ஜனங்களிலும் பல பேர் தாங்களும் விஷயம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் ஆகியிருக்கிறது. எல்லாரும் பேசுகிறதாக ஆகியிருதாலும், பண்ணமுடியுமா-ஸரியாக, அதற்கான கட்டுப்பாடுகளோடு, விடாமுயற்சியோடு ஒரு பெரிய பவர் ரிலீஸாகிறதைப் பக்குவமாகத் தாங்கிக் கொள்கிற தைர்யத்தோடு பண்ண முடியுமா – கடைசிப் படிவரை டிஸ்ட்ராக்ஷன் இல்லாமல் பண்ணிக் கொண்டு போய் ஜயிக்க முடியுமா என்கிறது பெரிய கேள்வியாக இருக்கிறது. சும்மாவுக்காக அதைப் பற்றி பேசுவது புரளிதான். அதைவிட விபரீதம், சும்மாவுக்காகப் பேசுவதாக இல்லாமல் தப்பும் தாறுமாகப் பண்ணிப் பார்த்துப் பல தினுஸான கஷ்டங்களுக்கு, ப்ரமைகளுக்கு ஆளாகிறது. அதனால்தான் இந்த ஸப்ஜெக்டில் இறங்க நான் ப்ரியப்படுவதில்லை. ஆனாலும் ”ஸெளந்தர்ய லஹரிக்கு அர்த்தம் சொல்றேண்டா!” என்று ஆரம்பித்து விட்டு, இதை அப்படியே மூடி மறைப்பதென்று பண்ணப் பார்த்தால் நீங்கள் வேறே வழியில் தூக்கிப் பார்க்கத்தான் செய்வீர்களென்பதால் என் அபிப்ராயத்தை இளக்கிக் கொண்டு ப்ரஸ்தாபம் பண்ணுகிறேன்;’ வார்னிங்’கோடு சேர்த்தே ப்ரஸ்தாபிக்கிறேன்….

உட்ராஃபை நான் குற்றம் சொல்லவேயில்லை. ‘தாங்க்’ தான் பண்ணுகிறேன். ‘யோக சக்தி, யோக ஸித்தி என்பதெல்லாமே பொய். எங்கள் ஸயன்ஸுக்குப் பிடிபடாததாக அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது’ என்று மேல் நாட்டார்களும், அவர்கள் சொல்வதையே வேத வாக்காக எடுத்துக்கொண்ட நம்மவர்களும் சொல்லி வந்தபோது உட்ராஃப்தான் அது ஸத்யமானது, ஸயன்ஸுக்கு மேலான ஸூபர்ஸயன்ஸாக இப்படியிப்படி ஆகப்பட்ட ஒழுங்கில் அதன் கார்யக்ரமம் இருக்கிறது என்று விளக்கமாக எழுதி எல்லார் கண்ணையும் திறந்து வைத்தார். அவர் அப்படிப் பிரசாரம் பண்ணியில்லா விட்டால், நிஜமாகவே அந்த மார்க்கத்துக்கு அதிகாரிகளாக இருக்கப்பட்டவர்கள்கூட அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மார்க்கம் மங்கிப் போயிருந்தது.

அவர் எழுதினதில் நம்பிக்கை உண்டாக்கித்தான் பல பேர் அப்போது நிஜமாகவே யோக ஸித்தி பெற்றிருந்த யோகிகளிடம் போய் அந்த வழியைக் கற்றுக்கொண்டு, அதற்கப்புறம் மங்கிப் போன வழிக்குப் பிரகாசமான காலம் பிறந்தது. இன்றைக்கு வரை நல்ல யோக ஸித்தர்களும் உண்டாகாமலில்லை. அவர்களிடம் முறைப்படி கற்றுக் கொண்டு, முன்னேறும் ஸாதகர்களும் இல்லாமலில்லை. ஆனாலும் போலிகளும் சேர்வது, பிரகாசம் என்றேனே, அது கண்ணைக் குத்தும் அளவுக்கு வெறும் பேச்சில் மட்டும் பளபளப்பது என்றெல்லாமும் நிறைய ஆகியிருக்கிறது. இதைப் பார்க்கும்போதுதான் ஆத்மாவுக்கு நல்லதைத் தேடிக்கொண்டு போக்க வேண்டிய பொழுதை நாம் அப்யாஸம் பண்ணுவதாக இல்லாத ஒரு வழியைப் பற்றிய பேசி விருதாவாக்குவானேன் என்று தோன்றி [இதுவரை தெரிவித்த அபிப்ராயத்தை]ச் சொன்னேன்.

இவ்வளவு சொன்னதாலேயே, அதில் சிலருக்கு இன்ட்ரெஸ்ட் உண்டாக்கியிருப்பேனோ என்னவோ? அதனால் ஒரு தடவைக்குப் பல தடவையாகப் எச்சரிக்கிறேன்: ‘நிச்சயமாக ஸித்தியானவர் எந்தவிதமான ஸொந்த ஆதாயத்தையும் கருதாதவர், சிஷ்யர்களைக் கைவிடாமல் கண்காணித்து மேலே மேலே அழைத்துப் போகக் கூடியவர் என்று உறுதியாக நம்பக்கூடிய ஸத்குரு கிடைத்தாலொழிய யாரும் ஸ்வயமாகவோ, அல்லது இப்போது எங்கே பார்த்தாலும் புறப்பட்டிருக்கிற அநேகம் யோகிகள் என்கிறவர்களிடம் போயோ இந்த யோகத்தை அப்யாஸம் பண்ணப்படாது. இது அதிஜாக்ரதை தேவைப்படுகிற ஸமாசாரம்’ என்று எச்சரிக்கை பண்ணுகிறேன்.

இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் மந்த்ர யோகத்திலும் ஜாக்ரதையாகவே இருக்கவேண்டும். குண்டலிநீ யோக ரிஸல்ட்களையே மந்த்ர யோகமும் சப்தங்களினால் உண்டாகிற நாடி சலனங்களின் மூலம் உண்டு பண்ணுவதுண்டு. குருமுக உபதேசம் இங்கேயும் அத்யாவசியமானது. இந்தக் காரணங்களால் மந்த்ர சாஸ்திர ஸமாசாரங்களையும் உபாஸகர்கள், அல்லது ச்ரத்தையாக உபாஸிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் தவிரப் பொத்தம் பொதுவில் விஸ்தாரம் செய்வது உசிதமில்லை.

க்ரமமாக உபதேசமில்லாமல் மந்திரங்களைத் தெரிந்து கொள்வதால் ஒரு ப்ரயோஜனமுமில்லை. வீட்டுக்குள்ளே உசந்த ஒயர், ஸ்விட்ச், ‘இம்போர்ட் பண்ணின பல்பு எல்லாம் போட்டாலும் பவர்ஹவுஸிலிருந்து கனெக்ஷன் இல்லாமல் விளக்கு எரியுமா? அப்படித்தான் குருவின் பவர் – உயிர் பவர் – இல்லாமல் மந்த்ர சப்தங்களை ஸ்வயமாக எடுத்துக் கொள்வதும்.

ஒரு ப்ரயோஜனமும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. சப்த வீர்யம் முறையாக க்ரஹிக்கப்படாவிட்டால் விபரீத பலனும் உண்டாகலாம். அதனால் உதாரணத்தை மாற்றிச் சொல்கிறேன்: மந்த்ர சப்தங்களே எலெக்ட்ரிஸிடி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நாமே போய்த் தொட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியுமா? ‘ஷாக்’தான் அடித்துக் கஷ்டப்படுவோம். குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும். எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்

சுபம்

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் – 5 | MUSINGS – 5

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம்

இந்த ஸ்தவத்தின் ஒவ்வொரு பாவின் முதல் வரியின் முதல் எழுத்தும் காதி வித்யையான பஞ்சதஸி மந்திரமான “க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்” என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது. இப்பா, இறைவியை மானஸ பூஜை முறையில், ஆராதிக்க உபயோகிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இதேபோல், தேவி ஸ்ரீ ரஜ-ராஜேஸ்வரி பதிகங்களிலும் இதுபோன்றே எழுத்து வரிசை காணப்படுகிறது. சங்கரர் மறைக்கவில்லையே, புஷ்ப மாலையாக அன்றோ அருளினார். அதன்பின் அதற்க்கும் மேல் ஒருபடி சென்று, த்ரிபுரசுந்தரி சன்னதி ஸ்தவத்தில், மனித குலம் உய்ய, அம்பிகையின் சான்னித்யத்தில் என்றும் குளிர்ந்திருக்க “ஷோடஸி வித்யா”யையுமன்றோ அருளினார்.

ஏதோ, அம்பாள் உபாஸகரான தீக்ஷிதர் மந்திரங்களை, அதுவும் ஷோடஸியை, மட்டுமல்லாது, தஸ மஹாவித்யயின் சாரத்தையும் ஆர்வ மிகுதியால் பொதுஜனங்களுக்கு சென்றடைய செய்தார் எனில், அவருக்கும் பல நூற்றாண்டுகள் முன்பே ஆதி சங்கரர், அம்பிகையால் அருளப்பட்ட ரஹஸ்ய, அதிஸய பலன் உடைய, ஆராதனை முறைகளைக்கூட ஸ்ரீ ஆதி சங்கரரும், ஸ்ரீ தீக்ஷிதரும், நம் எல்லோரும் பயன் அடைய விட்டுச்சென்றனர். ஆயின், இன்றோ வைதீகம் வியாபாரமாகிவிட்டது தான் வருத்தத்திற்குறியது.

இதன் பலன், அரை குறையாக ஆஸரணை செய்யும் ஆச்சார்யர்களுக்கு, அரை குறையான சந்ததிகள், அல்லது சந்ததி இல்லாமை, வாக் ஸ்தம்பனம், மற்றும் இன்னம் இதர சொல்ல இயலாத வகையில் பலன்கள்.

இதன் பயனாக ஆலயங்களில் இறைவனை வழிபடுவோரும், “24 மணி நேரமும் கோவிலே என்று கிடக்கும் அர்ச்சகரின் கோரிக்கையயே ஆண்டவன் என்ன என்று கேட்கவில்லை, நம் கோரிக்கையையா கேட்கப்போகிறார்” என்று எண்ணி, அசட்டையாகி விடுகின்றனர். இதுவும், நமது சமூக சீர்கேட்டிற்கு ஒரு காரணம். அர்ச்சகர் முறையாக, விதிப்படி வழிபட்டிருந்தால் அன்றோ இறைவனும், அவன் கூற்றுப்படி, அவ்வழிபாட்டின் பயனை அருளியிருப்பான்!

தயை கூர்ந்து சிந்திக்கவும்; க்ரந்த கர்த்தா ஒரு பாமாலையை படைத்து, அதன் பலனை அனுபவிக்காமல் அதை உலகிற்கு தெரிவிக்கவில்லை. நன்றாக பலனை அனுபவித்து, பின்னரே உலகிற்கு தெரிவித்தனர். உதாரணம் அபிராமி அந்தாதி, கனகதாரா ஸ்தோத்திரம். இன்றும் கனகதாரா ஸ்தோத்திரத்தை முறையோடும், ஸ்ரத்தையோடும் அனுஷ்டான முறையில் அனுசரித்து பலனடைந்தவர்கள் ஏராளம்.

பொதுவாக, பாமர மக்கள், ஏன் நாம் கூட, இறைவனுக்கு வழிபாடு நடத்தி, இறைவனிடம் நமது இன்னல்களை மண்டித்து ஆராதனை செய்தவுடன், ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். இது மனித இயல்பு. ஆயின், வேத வித்துக்கள் என்றும், வித்வான் என்றும், ஆச்சார்யர் என்றும் சமூகத்தில் அந்தஸ்துடைய ஆச்சார்யர்களே, சாபக்ரஸ்தராகும் பொழுது, சமூகம் இறையாண்மையை மறப்பது வெறுப்பது முறையே அன்றோ.

ஆச்சார்ய வர்கம், இதன் பிறகாவது, காலை, மாலை வேளைகளில், ஆலயம் புகுமுன்பு, தம் தமது இல்லங்களில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட அனுஷ்டானங்களை முழுமையாக நிறைவேற்றி, காயா, வாச்சா, மனஸா, சுத்தியுடன் ஆலய பிரவேஸம் செய்து, மூலவரையும், பரிவார தேவதைகளையும் முறையாக ஆராதித்து, வரும் பக்தர்களுக்கும், தமக்கும், தம் வர்கத்திற்கும் அருள் சேர்க்க முயற்ச்சிப்பார்களா?

இந்த ஆதங்கத்திற்கு காரணம், ஸர்வருக்கும் பயன்படவேண்டிய மந்திரங்களை, நமது முன்னோர்கள் எழிமையான ஸ்லோகங்களாக, எழிலாக, வெரும் ஸ்தோத்திரங்களாக, ஸ்ரீ வித்யாவிற்கே உண்டான கடின அனுஷ்டானங்கள் இல்லாமல் அமைத்துக் கொடுத்தும் இன்னமும் அவை வைதீக வியாபார வேத வித்துக்களைக்கூட சென்று அடையவில்லையே என்பது தான். அப்படி அடைந்திருந்தால், அவர்களும் பயனுற்று, அகிலமும் பயனுற முயற்ச்சிப்பர் அல்லவா! என்ற எண்ணமே. காக்கப்படவேண்டிய ரஹஸ்யங்கள் காக்கப்படட்டும், அனுஷ்டிக்கப்பட வேண்டிய அனுஷ்டானங்கள் அனுஷ்டிக்கப்படட்டும். அனுபவித்து ஆனந்திக்க வேண்டியவைகள் அனுபவிக்கப்படட்டும்.

‘ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம்’

1.ல்லோலோல்லஸிதாம்ருதாப்திலஹரீமத்யேவிராஜன்மணி
த்வீபேகல்பகவாடிகாபரிவ்ருதேகாதம்பவாட்யுஜ்வலேமி |
ரத்னஸ்தம்பஸஹஸ்ரநிர்மிதஸபாமத்யேவிமாநோத்தமே
சிந்தாரத்னவிநிர்மிதம்ஜநதிதேஸிம்ஹாஸநம்பாவயேமிமி ||

2.ணாங்காநலபர்னுமண்டலலஸத்ஸ்ரீசக்ரமத்யேஸ்திதாம்
பாலோர்கத்யுதிபாஸுராமகரதலை:பாசாங்குசௌபிப்ரதீம் |
சாபம்பாணுமபிப்ரஸந்நவதநாம்கௌஸும்பவஸ்த்ரான்விதாம்
தாம்த்வாம்சந்த்ரகலாவதம்ஸமகுடாம்சாருஸ்மிதாம்பாவயே ||

3.சாநாதிபதம்சிவைகபலகம்ரத்னாஸனம்தேசுபம்
பாத்யம்குங்குமசந்தனாதிபரிதைரர்க்யம்ஸரத்னாக்ஷதை: |
சுத்தைராசமநீயகம்தவஜலைர்பக்த்யாமயாகல்பிதம்
காருண்யாம்ருதவாரிதேததகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||

4.க்ஷ்யேயோகிஜநஸ்யரக்ஷிதஜகத்ஜாலேவிசாலேக்ஷணே
ப்ராலேயாம்புபடீரகுங்குமலஸத்கர்பூரமிச்ரோதகை: |
கோக்ஷீரைரபிநாலிகேரஸலிலை:சுத்தோதகைர்மந்த்ரிதை:
ஸ்நானம்தேவிதியாமயை ததகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||

5.ஹ்ரீங்காராங்கிதமந்த்ரலக்ஷிததநோஹேமாசலாத்ஸஞ்சிதை:
ரத்னைருஜ்வலமுத்தரீயஸஹிதம்கௌஸும்பவர்ணாம்சுகம் |
முக்தாஸந்ததியஜ்ஞஸ¨த்ரமமலம்ஸெளவர்ணதந்தூத்பவம்
தத்தம்தேவிதியாமயைத்தகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||

6.ம்ஸைரப்யதிலோபநீயகமநேஹாராவலீமுஜ்வலாம்
ஹிந்தோலத்யுதிஹீரபூரிததரேஹேமாங்கதேகங்கணே ||
மஞ்ஜீரௌமணிகுண்டலேமகுடமப்யர்தேந்துசூடாமணிம்
நாஸாமெனக்திகம்அங்குலீயகடகௌகாஞ்சீமபிஸ்வீகுரு ||

7.ர்வாங்கேகனஸாரகுங்குமகனஸ்ரீகந்தபங்காங்கதிதம்
கஸ்தூரீதிலகம்பாலபலகேகோரோசநாபத்ரகம்மி |
கண்டாகர்சனமண்டலேநயநயோர்த்வ்யாஞ்ஜநம்தேsரஞ்சிதம்
கண்டாப்ஜேம்ருகநாபிபங்கம்அமலம்த்வத்ப்ரீதயேகல்பதாம் ||

8.ல்ஹாரோத்பலமல்லிகாமருவகை:ஸெளவர்ணபங்கேருனஹ:
ஜாதீசம்பகமாலதீவகுலகைர்மந்தாரகுந்தாதிபி: |
கேதக்யாதரவீரகை:பகுவிதா:க்லுப்தா:ஸ்ரஜேமாலிகா:
ஸங்கல்பேநஸமர்பயாமிவரதேஸந்துஷ்டயேக்ருஹ்யதாம்மிமி ||

9.ந்தாரம்மதநஸ்யநந்தயஸியைரங்கைரநங்கோஜ்வலை:
பைர்ப்ருங்காவலிநீலகுந்தலபரை:பத்நாஸிதஸ்யாசம் |
தாநீமாநிதவாம்பகோமலதராண்யாமோதலீலாக்ருஹா
ண்யாமோதாயதசாங்ககுக்குலுக்ருதைர்துபைரஹம்தூபயேமிமி ||

10.க்ஷ்மீமுஜ்வலயாமிரத்னநிவஹோத்பாஸ்வந்தரேமந்திரே
மாலாரூபவிலம்பிதைர்மணிமயஸ்தம்பேஷ§ ஸம்பாவிதை: |
சித்ரைர்ஹாடகபுத்ரிகாகரத்ருதைர்கவ்யைர்க்ருதை: மிவர்திதை:
திவ்யைர்தீபகணைர்தியாகிரிஸுதேஸந்துஷ்டயேகல்பதாம் ||

11.ஹ்ரீங்காரேச்வரிதப்தஹாடகக்ருதை:ஸ்தாலீஸஹஸ்ரைர்ப்ருதம்,
திவ்யான்னம்க்ருதஸ¨பசாகபரிதம்சித்ரான்னபேதம்ததா |
துக்தான்னம்மதுசர்கராததியுதம்மாணிக்யயாத்ரேஸ்திதம்
மாஷாபூபஸஹஸ்ரமம்பஸகலம்நைவேத்யமாவேதயே ||

12.ச்சாயைர்வரகேதகீதலருசாதாம்பூலவல்லீதலை:
பூகைர்பூரிகுணை:ஸுகந்திமதுரை:கர்பூரகண்டோஜ்வலை: |
முக்தாசூர்ணவிராஜிதைர்பகுவிதைர்வக்த்ராம்புஜாமோதனை:
பூரணாரத்னகலாசிகாதவமுதேந்யஸ்தாபுரஸ்தாதுமே ||

13.ன்யாபி:கமநீயகாந்திபிரலங்காராமலாரார்திகா
பாத்ரேமௌக்திகசித்ரபங்க்திவிலஸத்கர்பூரதீபாலிபி: |
தத்தத்தாலம்ருதங்ககீதஸஹிதம்ந்ருத்யத்பதாம்போருஹம்
மந்த்ராராதனபூர்வகம்ஸுவிஹிதம்நீராஜநம்க்ருஹ்யதாம்மிமி ||

14.க்ஷ்மீர்மௌக்திகலக்ஷகல்பிதஸிதச்சத்ரம்துதத்தேரஸாத்
இந்த்ராணீரதிஸ்சசாமரவரேதத்தேஸ்வயம்பாரதீ |
வீணாம், ஏணவிலோசநா:ஸுமநஸாம்ந்ருத்யந்திதத்ராகவத்
பாவை:ஆங்கிகஸாத்விகை:ஸ்புடதரம்மாதஸ்தாகர்ண்யதாம்மிமி ||

15.ஹ்ரீங்காரத்ரயஸம்புடேநமனுநோபாஸ்யேத்ரியீமௌலிபி:
வாக்யைர்லக்ஷ்யதநோதவஸ்துதிவிதௌகோவாக்ஷமேதாம்பிகே |
ஸல்லாபா:ஸ்துதய:ப்ரக்ஷிணசதம்ஸஞ்சாரஏவாஸ்துதே
ஸம்வேசோநமஸ:ஸஹஸ்ரமகிலம்த்வத்ப்ரீதயேகல்பதாம் ||

16.ஸ்ரீமந்த்ராக்ஷரமாலயாகிரிஸுதாம்ய:பூஜயேத்சேதஸா
ஸந்த்யாஸுப்ரதிவாஸரம்ஸுநியதஸ்தஸ்யாமலம்ஸ்யான்மந: |
சித்தாம்போருஹமண்டபேகிரிஸுதாந்ருத்தம்விதத்தேரஸாத்
வாணீவக்த்ரஸரோருஹேஜலதிஜாகேஹேஜகன்மங்களா ||

17.இதிகிரிவரபுத்ரீபாதராஜீவபூஷா
புவனமமலயந்தீ¨க்திஸெளரப்யஸாரை: |
சிவபதமகரந்தஸ்யந்திநீயம்நிபந்தா
மதயதுகவிப்ருங்கான்மாத்ருகாபுஷ்பமாலைமிமி ||

மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் முற்றிற்று.

மேற்கண்ட ஸ்தோத்திர பாராயண பலன் இங்கே, இது இந்த ஸ்லோகத்திலேயே 16-ஆம் பத்தியில் “பல ஸ்ருதியாக” உள்ளது.

“எவரொருவர், தினந்தோரும் காலையிலும் மாலையிலும் மந்த்ரபீஜாக்ஷரம் பொதிந்த இந்த ஸ்தோரத்தை மனம் வைத்து பாராயணம் செய்து தேவியை பூஜிக்கிறாரோ, அவர் மனம் அமைதி கொள்வது மட்டுமின்றி, அவர் ஹ்ருதயதாமரையில் ஸ்ரீ தேவி மகிழ்ச்சியுடன் களிநடனம் புரிவாள், நாவில், பேச்சில் ஸரஸ்வதீ நடனம் புரிவாள், வீட்டில் உலகுக்கெல்லாம் மங்கல நாயகியான லக்ஷ்மீ வாஸம் செய்வாள்.”

எந்த பக்தனும், இதைவிட வேறொன்றும் இறைவனிடம் யாசிக்கப் போவதில்லையே!

குண்டலினி யோகத்தில் கிட்டும் அனைத்தும், பக்திமார்கத்தில் கிட்டிடும்போது, அல்லது, சாதாரணமான முறையில், உடலையும், உள்ளத்தையும் வருத்தாமல் எல்லாவற்றையும் அடைய வழிமுறைகள் இருக்கும்போது, ஏன் கடினமான வழிகளை தேர்வு செய்யவேண்டும்?

எளிய பக்தி மார்கம், மந்திர மார்கம், மற்றும் யந்திர தந்திர மார்கத்திற்கே, தேர்ச்சி பெற்ற குருவானவர், மிக மிக அவசியம். ஆரம்பத்தில், சாதாரண நிலையில், அனுஷ்டானங்களில் தேர்ச்சி பெற்றவர் குருவாக இருந்தால் போதும், இரண்டாவது நிலையிலேயே, தேர்ச்சி பெற்ற உபாஸகர், அதுவும் நீங்கள் தேர்வு செய்த தேவதா மூர்த்தியின் உபாஸகர் கண்டிப்பாகத் தேவை. இனி மூன்றாம் நிலையைப் பற்றியும், கடினமான நான்காம் நிலை பற்றியும் விளக்கவேண்டாம் என்று எண்ணுகிறேன்.

இனியும் ஒரு விஷயம். சிரம் தேயும், ராஜ்யம் தேயும், ந தேயா ஷோடஸாக்ஷரி என்று சொல்லப்பட்டிருக்கிறது. யான் அறிந்தவரை அதன் அர்த்தமாவது, ஷொடஸாக்ஷரியை உபாஸனை முறையை உபதேஸிக்க, அம்பிகையை அகல வேரு யாருக்கும் அதிகாரமில்லை. ஆயின், இது தான் ஷோடஸி, அம்பாளின் மிக ரஹஸ்ய மந்திரம், இதன் உபாஸனை முறைகளை அம்பிகையேதான் உபதேஸிப்பாள், அதற்கு தகுதியாக வேண்டுமென்றால், பஞ்சதஸியை உபாஸித்து அதில் சித்திபெற்று, ஷோடஸியை அம்பாளின் அனுக்ரஹத்தால் அடைவாயாக என்றல்லாவா பொருள் கொள்ளவேண்டும் அப்படி பொருள் கொண்டதால் தான், ஆதி சங்கரரிலிருந்து தீக்ஷிதர் வரை அந்த அத்புதமான மந்திரத்தை வெளியிட்டார்கள் – உபதேசிக்கவில்லையே? முறையாக உபாஸனை செய், உன்னத நிலையடைவாய் என்றனரே தவிர.

 

சுபம்

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் – 4 | MUSINGS – 4

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

முந்தய பதிவில் வாலை வணக்கம் பற்றி பார்த்தோம், அது ஒரு ஆராதனை பாடலாக இருந்தது.

இன்று, மந்திர ரஹஸ்யத்தை கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் (March 24, 1775 – October 21, 1835) எப்படி மத்யமாவதி ராகத்தில், ரூபக தாளத்தோடு அருளியிருக்கிறாரெனில்…

ஆராதயாமி ஸ்ததம்; கம் கணபதிம்; ஸௌ: சரவணம், அம் ஆம் ஸௌ: த்ரைலோக்யம், ஐம் க்லீம் ஸௌ: ஸர்வாஸாம்; ஹ்ரீம் க்லீம் ஸௌ: ஸ்ங்க்ஷோபணம், ஹைம் ஹக்லீம் ஹ்ஸௌ: ஸௌபாக்யம், ஹ்ஸைம் ஹ்ஸ்க்லீம் ஹ்ஸௌ: ஸர்வார்த்தம்; ஹ்ரீம் க்லீம் ப்லேம் ஸர்வ ரக்ஷாம்; ஹ்ரீம் ஸ்ரீம் சௌ: ரோக ஹரம், ஹ்ஸ்ரைம் ஹ்ஸ்க்ல்ரீம் ஹ்ஸ்ரௌ: ஸர்வ ஸித்திதம், க ஏ ஈ ல ஹ்ரீம் – ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் – ஸ க ல ஹ்ரீம் ஸ்ரீம் – ஸர்வானந்தம்; ஸ்ரீ நாதானந்த குரு பாதுகம் பூஜயே சதா: சிதானந்த நாதோஷம், காமேஷ்வராங்க நிலயாம், வைஸ்ரவண வினுத தனினீம் கணபதி குருகுஹ ஜனனீம் நிரதிஸய ஸுப மங்களாம், மங்களாம் ஜய மங்களாம் என்று சமஷ்டி சரணத்திலும்,

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம், மஹா த்ரிபுர ஸுந்தரீம் லலிதா பட்டாரிகம் பஜே | விதேஹ கைவல்யம் ஆஸு ஏஹி தேஹி மாம் பாஹி || என்று பல்லவியிலும் சொல்கிறார்

இங்கு ஸ்வாமி விவேகானந்தரின் உரையே நினைவில் நிற்கிறது. “Society does not go down because of the activities of criminals, But because of the inactivities of the good people.”

ஆதி ஸ்ங்கர பகவத்பாதாள் எப்படி இவற்றை உறைத்தார் என அடுத்த பதிவில் பார்ப்போமா!

இதுபோன்று இன்னமும் எவ்வளவோ என் ஊனக்கண்ணிற்கு புலப்படுகின்றன.

நம்மால் இயன்றவரை நம்மவர்க்கெல்லாம் இவ்வொளியை பரப்புவோமே, அதன் காண் பிற மத ஆதிக்கத்திற்கு அணை போடுவோமே.

எண்ணத்திலும் எழுத்திலும் உள்ள பிழை அடியேனையே சாரும். இந்த சேவை முயற்ச்சியை, ஆஸ்தீக சான்றோர் ஆதரிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.

சுபம்

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | கணபதியும் குண்டலினியும் | Ganapathi and Kundalini

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

தேவி காமாக்ஷி அம்மன்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

எண்ணிய எண்ணியாங்கு எய்துப் கண்ணுதல்
பவள மால் வரை பயந்த
கவள யானையின் கழல்பணிவோரே.

கணாதிபன் சன்னிதியில் தலையில் ஏன் குட்டிக் கொள்ளவேண்டும்?

மூலக்கனல் என்றும் சொல்லப்படும் சுஷும்னா நாடி, அடிவயிற்றின் கீழ் அதாவது முதுகு தண்டின் முடிவில், ஓம்கார ரூபமாய் அமைந்து செயல் படுகிறது. இதை தட்டி எழுப்பி, செயல்பட செய்து, மேல் நோக்கி ஸஹஸ்ரார மண்டலம் வரை செலுத்தி, சிரஸிலிருக்கும் அமிர்தத்துடன் கலந்து அவ்விடமே நிலை நிறுத்திக்கொண்டால், மனிதன் தன் நிலை மறந்து, பரமத்துடன் ஐக்கியப்பட்டு நிற்பான் எனவும், பேரானந்தத்தை அடைவான் என்றும் சொல்லப்படுகிறது.

இதை செயல்படுத்த மிக அதிக அளவு உஷ்ணம் உண்டு செய்யவேண்டும். இதற்கு மனதை ஒரே நிலையில் நிலை நிறுத்தி ஐக்கியப்படுத்த நெடும் நாம ஜப, தப, ஹோமாதிகள் செய்யவேண்டும் எனவும், அதெற்கெனவே நமது முன்னோர்கள், ரிஷிகள், சாஸ்திர விற்பன்னர்கள், தாவிர வர்க்கத்திலேயே மிக உஷ்ணமான அறுகு, எருக்கு, வன்னி பத்ரங்கள், விநாயகனுக்கு உகந்தது என வகுத்து, அகந்தை, ஆணவம் அழிந்தது என தலையில் குட்டிக்கொள்வதையும், தோப்புக்கரணம் போடுவதையும் வழக்கிலிருத்தினர்,

தோப்புக்கரணம் போடுவதால், மனித மூளையும் நரம்பு மண்டலமும் தூண்டப்பட்டு, அத்னால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது எங்கின்றன ஸாஸ்திரங்கள், ஆகையினாலேயே, முற்கால பள்ளிகளில், தவறு செய்யும் மாணாக்கர்களுக்கு, தோப்புக்கரணம் போடுவது தண்டனையாயிற்று.

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ண:
லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணத்யக்ஷா பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:

என பக்தியுடன் பாராயணம் செய்ய, பாங்குடனே வாழ்ந்திடுவாய் பாரினிலே!

சுபம்

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் – 3 | MUSINGS – 3

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

தேவி காமாக்ஷி அம்மன்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

நமது ஹிந்து மதம் மிகவும் புராதனமானது என்கிறோம். அதை கட்டிக்காக்க நாம் என்ன செய்தோம்? உண்மையை உள்ளதை மறைப்பது மட்டுமே அன்றோ!

நமது மதம் புராதனமானதினாலேயே நமக்கு, பல ஸாதகர்கள், பல காலகட்டங்களில் செய்த ஸாதனைகளின் பயனாக, மொழி – ஆம் மொழி, தமிழாகட்டும், ஸமஸ்க்ருதமாகட்டும் உருவானது. அதன் மூலம், பல பல விஷயங்கள், வாய் மொழியாக, வழி வழியாக நம்மை வந்தடைந்தது, அதற்கும் முன், குருவானவர், தனது தவ வலிமையால், இன்று ஆங்கிலத்தில் TELEPATHY என்று அறியப்படுகின்ற எண்ண அலைகள் பரிமாற்றம் மூலமாகவே தமது எண்ணங்களை தமது சிஷ்ய பரிவாரத்திற்கு உணர்த்தியுள்ளனர். உதாரணம், குரு தக்ஷிணாமூர்த்தி மவுனமாகவே வேதம் உணர்த்தியது. ஆப்படி மவுனமாக வேதம் உறைத்தவர், கும்ப சம்பவராம் அகத்திய முனிக்கு – வடக்கிலிருந்து, தெற்கிற்கு புலம் பெயர்ந்தவருக்கு – தமிழ் மொழியை உபதேஸிக்க காரணம் எதுவாக இருக்க முடியும்? யாராவது விளக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

அந்த கும்ப முனியார், தமிழுக்கென இலக்கியம், தமிழ் லிபி என்று எவ்வளவோ தமிழ் மொழிக்கும் தமிழ் மட்டும் அறிந்தோருக்கும் வேதம் விரிய வழி வகுக்கவில்லையா?

பின்னர் அவரே எழுத்தும், உச்சரிப்பும் பலனும் என மந்திரமாக தமிழையும் மாற்றவில்லையா?

திருமூலர் திருமந்திரமும், சொல்லும், பொருளும், எழுத்தும், அதன் இயல்பையும், உபயோகத்தையும் தமிழில் தானே விவரித்திருக்கிறது!

பர சிவனின் ஞானக்கண்ணின் ஞானப்பொறியாம், தக்ஷிண மூர்த்தி மூலமாக காமேஷ்வரனே தமிழை உருவாக்கி அகிலத்தில் அரங்கேற்றினார் என்றல்லவா பொருள் கொள்ளவேண்டும். இந்த அளவிர்க்கு தமிழின் மீதும் தமிழ் மக்களின் மீதும் வாஞ்சையுள்ள இறைவனின் கருணை எல்லோரையும் சென்று அடையவேண்டாமா!

உதாரணத்திற்க்கு: வாலை வணக்கம் எனும் பாலாம்பிகையின் தமிழ் செய்யுளில் முதல் பகுதியிலேயே, ஐம் க்லீம் சௌ என்ற பாலா பீஜம் உள்ளது, அதன் ந்யாசமும் உள்ளது. இதயத்தில் ஐம் என்றும், புருவ மத்தியில் க்லீம் என்றும், சிரஸில் சௌ எனவும் குறிப்பிட்டுள்ளதை காண்க.

“ஐந்”தரியெ ழிற்குமரி முந்துரவி செஞ்சுடர்

உந்தனித யத்திலுயர

இந்திரவில் சிந்துமொளி இத”கிலீங்” காரமென

இருபுருவ நடுவில்வளர

சந்திரனின் பாலொளிச் “சௌ”மியத் தண்சுடர்

சுந்தரிநின் சிரசில்விரிய

வந்தருள்க முப்பீஜ மந்திரம தானதிரு

வாலைதிரி புரையழகியே!

இரண்டாவதில் அம்மையின் யந்திரம் விளக்கப்பட்டுள்ளது.

அட்டவிதழ்முளரியுள் எண்கோணவலயமிடை

ஆதிபரைகோணமொன்றின்

நட்டநடுவேஞான நிட்டையொடுவளர்யோக

நங்கைசிவ மங்கைபரையே

மட்டவிழ்க்கந்தமிகு மரவிந்தமலரிலமர்

மங்கலை சிவானந்தியே

இட்டமுடன்வரமருள் சிட்டருக்கெளியதிரு

வாலைதிரி புரையழகியே!

இந்த வாலை வணக்கப்பாடலின் பல ஸ்ருதி என்னவெனில்,

ஆயிநின்மூவெழுத் தாதிமந்திரமுமுன்

அருளொளிருமழகுமுகமும்

தூயநிட்களையுனது துயரறுகடாட்சமும்

தெளிவொடுன்னுபவர்வாழ்வில்

நோயறும்வறுமைகெடும் செல்வம்செழிக்குமதி

ஞானமும்நலமும்வளரும்

ஓயுமடியோடுகொடு வினைகளும், வாழ்கதிரு

வாலைதிரிபுரையழகியே!

இதுபோன்று எவ்வளவோ என் ஊனக்கண்ணிற்கு புலப்படுகின்றன.

நம்மால் இயன்றவரை நம்மவர்க்கெல்லாம் இவ்வொளியை பரப்புவோமே, அதன் காண் பிற மத ஆதிக்கத்திற்கு அணை போடுவோமே.

எண்ணத்திலும் எழுத்திலும் உள்ள பிழை அடியேனையே சாரும். இந்த முயற்ச்சியை, ஆஸ்தீக சான்றோர் ஆதரிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: | ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Sri Adhiparasakthi Peetam | எச்சரிக்கை | Caution

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

தேவி காமாக்ஷி அம்மன்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

இந்த வலைப்பூவில் பலவகையான மந்திரங்களும், தந்திரங்களும், அதற்குண்டான யந்திரங்களும் விஸ்தாரமாக உறைக்கப்பட இருக்கின்றன.

இவை எல்லாம், நாம் உய்ய நம் முன்னோர்கள் கண்டறிந்த மார்கங்களும், விதிமுறைகளுமே ஆகும்.

இவையெல்லாம், குருவானவர் மூலம் உபதேஸம் பெற்றே அனுஷ்டிக்கப்படவேண்டியது.

சில ஸ்தோத்திரங்கள், பொது அல்லது கூட்டு வழிபாட்டில் அடங்கும்.

பொது என்பது, யார் வேண்டுமானாலும், நிபந்தனையின்றி பாராயணம் செய்யலாம்.

கூட்டு என்பது தேவ தேவி ஸன்னதியில் கூட்டாக பாராயணம் செய்யலாம், அப்படி செய்யும்போது, எந்த தேவ தேவி ஸன்னதியில் பாராயணம் செய்கிறீர்களோ, அந்த மூலமே, குருவாகவும், தெய்வமாகவும் இருந்து அனுக்ரஹிக்கும்.

குருமூலம் என்பது எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

உதாரணத்திற்கு: – ஓம் என்பது ப்ரணவமே சந்தேகமில்லாமல். அந்த “ஓம்” ந்யாஸிக்கும் பொழுது நமது அங்கத்தில் ஒரு பாகத்தில் ந்யாஸிக்கிறோம். பாராயணத்தின்போது, வேறு இடத்திலும், அதே ஸமயம் மந்திர தந்திரத்தின்போது அதே ஓம் வேறு இடத்தின் பலனையும் நல்குகிறது.

ஸமஸ்க்ருத மொழியில் மட்டுமே மந்திரங்கள் உள்ளன என எண்ணக்கூடாது. தமிழின் உயிர் எழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும், முறையாக கையாண்டால், அதிசய, அற்புத பலன் விளைவிப்பவை – நம்ப முடியவில்லை அல்லவா?

குண்டலிநி சக்தியைப்பற்றி விவரித்திருந்தாலும், அவற்றை முழுமையாக, லொகக்ஷேமம் கருதி வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவற்றையெல்லாம் விளக்குவதற்கும் அனுபவ உண்மைகளை எடுத்துறைப்பதற்கு மட்டுமே, இவற்றையெல்லாம் இங்கு பதிவிடுகிறேன்.

இதைக்கண்ணுரும் அன்பர்கள், இவ்வலையில் காணும் மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.

சுபம்

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: | ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஸ்ரீ லலிதா ஸௌபாக்ய ஸ்தோத்திரம் | Sri Lalitha Soubhagya Sthothram

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

தேவி லலிதாம்பிகை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க எ இ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

ஸ்ரீ லலிதாம்பிகை

“ஸ்ரீ லலிதா ஸௌபாக்ய ஸ்தோத்திரம்”

ஸ்ரீ திரிபுர ரஹஸ்யம் எனும் ஓர் அரிய நூலில் காணப்படும் ஒரு மஹோன்னத பொக்கிஷம் இந்த “ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்”. இதனை காமேஷ்வரனான சிவனே காமேஷ்வரியான தேவிக்கு அருளியதாக ஸ்ரீ பரசுராமருக்கு, ஸ்ரீ தத்தாத்ரேயர் உபதேஸிக்கிறார். இதிலுள்ள நாமாவளிகள் அனைத்தும் “ஸ்ரீ ஸௌபாக்ய வித்யா” மந்திரத்தை முன் வைத்து அமைக்கப்பட்டது.

“ஸ்ரீ வித்யா” என்ற அம்பிகையின் ஆராதனையை உபாஸிப்பவர்களுக்கு, பஞ்ச தஸாக்ஷரியிம் அதிலிருந்து பெறப்பட்ட ஸ்ரீ லலிதா த்ரிசதியும் இன்றியமையாதவை. ஸ்ரீ வித்யா பூஜாவிதிகளை கடைப்பிடிக்க மிகக்கடுமையான நியம, நிஷ்டைகள் மிக அவசியம். ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தை கடைப்பிடித்து, உய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் எழிதில் கிட்டாது. அம்பிகையே விரும்பினால் தான், இம்மார்கம் வயப்படும் என்பது சான்றோர் வாக்கு.

அப்படிப்பட்ட அம்பிகையை எல்லோரும் வணங்கி, உய்யவே ஐயன் நந்தி வாஹனன், ஸ்ரீ தத்தர் – ஸ்ரீ பரசுராமர் மூலமாக உலகிற்கு இதை உறைத்தார் என்பது சான்றோர் கருத்து.

விமர்ஸ ப்ரணவங்கள்: ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸௌ:

இதில் பாலா திரிபுரசுந்தரியின் மூலம் “ஐம் க்லீம் ஸௌ:” – இதை பஞ்சதசியின் ஒவ்வொரு கூடத்தின் முன்னும் சேர்த்தால் கிடைப்பது, “ஸௌபாக்ய வித்யா”. யாதெனில், “ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம், க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம், ஸௌ: ஸ க ல ஹ்ரீம்” எனும் ஸக்தி மிகு 18 அட்சர மந்திரம். இந்த மந்திரத்தை உபாஸிக்க, கடினமான அனுஷ்டானம் தேவை. அனுஷ்டிக்க விருப்பமுள்ளவர்கள், எம்மை தொடர்பு கொள்ளலாம்.

க ஏ ஈ ல, ஹ ஸ க ஹ ல, ஸ க ல என்பது, பீஜங்களையும், சிவ சக்தி பீஜமான ஹ்ரீம் ஐயும் எடுத்துவிட்டால் நிற்பது, இவற்றுள் சக்தி அட்சரங்களை, மறு முறை ப்ரயோகிக்காமல் இருந்தால் அமைவது, “க ஏ ஈ ல ஹ ஸ க ஹ க” என்ற நவாக்ஷரீ அமைகிறது. இரண்டாவது மூன்றாவதாக வரும் க வை அ என்று மாற்றியும், இரண்டாவதாக வரும் ஹ வை ர என மாற்றவும் வேதங்களால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாரு இரண்டாவது வகை நவாக்ஷரி “க ஏ ஈ ல ஹ ஸ அ ர அ” என அமைகிறது.

இதனை சிறிது திருத்தி எழுதினால் க அ ஏ ஈ ல ஹ ர அ ஸ என்ற நவாக்ஷரி கிடைக்கிறது. இந்த நவாக்ஷரியை வைத்தே ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் 12 நாமாவாக 108 நாமம் உள்ள சொபாக்ய அஷ்டோத்திர சத நாமாவளி ஸ்தோத்ரம் அமையப்பெற்றுள்ளது.

இவ்வாறு பஞ்சதசியிலிருந்து பெறப்பட்ட நவாக்ஷரி ஸ்தோத்ர மாலை அல்லது அஷ்டோத்திரம், பாராயணம் செய்யும் பொழுது, அன்னையின் பேரருளால், பஞ்ச தஸி மந்திரத்தின் பெரும் பலன், பஞ்சதசியின் கடின ஆராதனை முறையில்லாமல், சாதாரண ஆராதனை முறையிலேயே கிட்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்த ஆராதனையை இருபாலரும் அம்பிகையின் முன்னே, வீட்டிலேயோ அல்லது கோவிலிலோ, கூட்டு வழிபாடாகவோ, அல்லது தீப வழிபாடாகவோ செய்யலாம். வெள்ளிதோரும் வாக்கு, மனம், உடல் சுத்தியுடன் இதை தொடர்ந்து பாராயணம் செய்ய, வியக்கத்தகு சர்வதோமுக பலன் தரும் ஒரு ரஹஸ்ய தேவி உபாஸனை முறை இது.

இங்கு, த்யான ஸ்லொகமும், மாலா ஸ்தோத்திர மந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான பூஜை முறை பின்னர் இவ்வலைப்பூவில் இடப்படும்.

த்யானம்.

வந்தே காமகலாம் திவ்யாம் கருணாமய விக்ரஹாம் |
மஹா காமேஷ மஹிஷீம் மஹா திரிபுரசுந்தரீம் ||

மாலா ஸ்தோத்திர மந்திரம்

ஓம் காமேஷ்வரீ காமசக்தி: காம ஸௌபாக்ய தாயினி |
காமரூபா காமகலா காமினி கமலாஸனா || – 1

கமலா கல்பனாஹீநா கமநீய கலாவதி |
கமலா பாரதி ஸேவ்யா கல்பிதாஸேஷ ஸம்ஸ்க்ருதி || – 2

அநுத்தராநகா அனந்தா அத்புதரூபா அநலோத்பவா |
அதிலோக சரித்ராதி ஸுந்தரீ அதிஸுபப்ரதா || – 3

அகஹந்த்ரீ அதிவிஸ்தாரா அர்ச்சந துஷ்ட்ட அமிதப்ரபா |
ஏகரூபா ஏகவீரா ஏகநாதா ஏகாந்தார்ச்சன ப்ரியா || – 4

ஏகைக பாவதுஷ்டா ஏக ரஸா ஏகாந்த ஜனப்ரியா |
ஏதமாந-ப்ரபவைதத் பக்த-பாதக நாஸினீ || – 5

ஏலாமோதஸுகா ஏனோத்ரி சக்ராயுத ஸம்ஸ்திதி: |
ஈஹாஸூன்யா ஈப்த்சிதேஸாதி ஸேவ்யா ஈஸான வராங்கநா: || – 6

ஈஸ்வராஜ்ஞாபிகா ஈகாரபாவ்யேப்ஸித பலப்ரதா |
ஈஸானாதிஹரேக்ஷேக்ஷத் அருணாக்ஷீஸ்வரேஸ்வரீ || – 7

லலிதா லலனாரூபா லயஹீநா லஸத்தநு: |
லயசர்வா லயக்ஷோணி:லயகர்த்ரீ லயாத்மிகா || – 8

லகிமா லகுமத்யாட்யா லலமாநா லகுத்ருதா |
ஹயாரூடா ஹதாமித்ரா ஹரகாந்தா ஹரிஸ்துதா || – 9

ஹயக்ரீவேஷ்டதா ஹாலா ப்ரியா ஹர்ஸமுத்பவா |
ஹர்ஷணா ஹல்லகாபாங்கீ ஹஸ்த்யந்தைஸ்வர்ய தாயினீ || – 10

ஹலஹஸ்தார்ச்சித-பதா ஹவிர்தாந ப்ரஸாதினீ |
ராமா ராமார்ச்சிதா ரஜ்ஞீ ரம்யா ரவமயீ ரதி: || – 11

ரக்ஷிணீ ரமணீ ராகா ரமணீ மண்டலப்ரியா |
ரக்ஷிதாகில லோகேஸா ரக்ஷோகண நிஷூதினீ || – 12

அம்பாந்தகாரிண்யம்போஜ ப்ரியாந்தக பயங்கரீ |
அம்புரூபாம் புஜகராம் புஜ ஜாத வரப்ரதா || – 13

அந்த: பூஜா ப்ரியாந்தஸ்த ரூபிண்யந்தர்-வசோமயீ |
அந்தகாராதி வாமாங்க ஸ்திதாந்த ஸுகரூபிணீ || – 14

ஸர்வக்ஞா ஸர்வகா ஸாரா ஸமாஸமசுகா ஸதீ |
ஸந்ததி: ஸந்ததா ஸோமா ஸர்வா ஸாங்க்ய ஸநாதநீ || – 15

சுபம்